நோயின் ஆரம்பக்கட்டத்தில் எதுவிதமான வெளிப்படைத்தன்மையை குறிக்கும் அறிகுறிகள் எதுவும் காட்டப்படுவதில்லை. இதனால், ஆரம்ப நிலையில் நோயாளர்கள் வைத்திய ஆலோசனை பெற நாடுதல் அரிதாகும். எனவே கிராமமாக ஆரோக்கிய நிலையில் இருப்பவர்கள் தயக்கமின்றி தமக்கு புற்றுநோய் இல்லை என்பதைப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்துதல் சிறப்புடையதாகும். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கானவர்களைப் பரிசீலித்து அவர்கள் மத்தியில் ஆரம்பக்கட்டத்தில், தாக்கத்திற்கு உள்ளாகி இருப்பவர்களை இனம்காணல் சாத்தியமாகும். இவை இலகுவான காரியமல்ல.
எனவே இந்நோய்க்கு இலக்காகக்கூடிய ஆபத்தான சூழலில் இருப்பவர்களை கிராமமாகப் பரிசீலித்தல் நன்மை பயப்பதாக அமையும்.
01. அவ்விலக்கினர் ஆகுபவர்கள்:-
அ. கூடுதலாகப் புகைப்பிடிப்பவர்கள்.
ஆ. வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புடன் - புகையிலை சப்புபவர்கள்.
ஆ. வெற்றிலை பாக்குச் சுண்ணாம்புடன் - புகையிலை சப்புபவர்கள்.
இ. தொழில் நிலைப்பாதிப்பு - அஸ்பஸ்ரஸ் தொழிலில் ஈடுபடுபவர்; 'X' ray கதிர்வீச்சுடன் செய்பவர்.
ஈ. சாயம் போடும் தொழில்புரிவோர் முதலானோர். ஆரம்பக்கட்டத்தில் இனம் காண்பதால் உயிராபத்து ஏற்படுவதை தடுக்கலாம் அதற்கான செலவீனமும் மிகக்குறைவாகும்.
.
உ. மார்பகப் புற்றுநோய், வாயில் சம்பவிக்கும் புற்றுநோய் - நாம் ஒவ்வொருவரும் எமது வாயை கண்ணாடியில் பார்த்து ஏதாவது அசாதாரண நிலை இருப்பதை அவதானிக்கலாம்.
.
உ. மார்பகப் புற்றுநோய், வாயில் சம்பவிக்கும் புற்றுநோய் - நாம் ஒவ்வொருவரும் எமது வாயை கண்ணாடியில் பார்த்து ஏதாவது அசாதாரண நிலை இருப்பதை அவதானிக்கலாம்.
ஊ. நீண்ட நேரம் வெற்றிலை பாக்கு பாவிப்பவர் சொக்கை உட்பக்கம் கண்ணாடியில் பார்க்கலாம். வெண்படலமான நிறமாற்றம் - இவை முதலாம் படிநிலைமையாகும். வெற்றிலைப் பாக்குப்போடுவதை நிறுத்தினால் இவ்வாபத்தில் இருந்து விடுபடலாம்.
எ. சில பற்கள் உடைந்திருக்கலாம். தொடர்ந்து நாக்கு அதனில் உரசும் நிலைமையாகில், நாக்கில் (அதன்
ஓரத்தில்) வெண்படலம் தோற்றமாகும். குறிப்பிட்ட பல்லை அகற்றின் ஆபத்தில் இருந்து விடுபடலாம்.
ஓரத்தில்) வெண்படலம் தோற்றமாகும். குறிப்பிட்ட பல்லை அகற்றின் ஆபத்தில் இருந்து விடுபடலாம்.
ஏ. பீடி புகைப்பவராகில் - உதட்டில் தொடர்ந்து சூடு பிடிக்க அக்கலங்கள் பாதிப்படையலாம். இதனால்
குறிப்பிட்ட இடத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்பட்டுப் புற்றுநோய் உருவாகலாம்.
குறிப்பிட்ட இடத்தில் அசாதாரண வளர்ச்சி ஏற்பட்டுப் புற்றுநோய் உருவாகலாம்.
ஐ. இருபது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மார்பகங்களை கிராமமாகப் பரிசோதனை செய்தல் சாத்தியமாகும். இதன் மூலம் அசாதாரண வளர்ச்சி இருப்பின் இலகுவில் இனங்காணலாம். ஆபத்தில் இருந்து எம்மைப் பாதுகாக்கலாம் Pap semear test - அசாதாரண நிலைகானின் (பெண்குறியில்) நோய் நிலைமையை நிச்சயப்படுத்தலாம்.
02. பின்வரும் அறிகுறிகளில் எதாவது ஒன்றைக் காணின் புற்றுநோயாக இருக்குமோ என ஐயறிவு கொள்ள வேண்டும்.
அ. வாயின் எப்பகுதியிலாவது வெண்மையான படலம் அல்லது சிவப்புநிறமான நிறமாற்றம் (படலம்).
ஆ. உடலின் திறந்த - வெளிப்படுநிலை - மலவாசல், பெண்குறியில் இருந்து வழமைக்கு மாறாக இரத்தம் வெளியேறுதல், அல்லது கழிவு/ சீழ் நீர் கசிதல் முதலியன.
இ. மார்பகத்தில் கட்டி, உட்பகுதியில் கனமாதல்/ கட்டிபோல் உணர்தல். அல்லது உடலின் எப்பகுதியிலாவது கட்டி, அசாதாரண வளர்ச்சி அல்லது கறுப்புப்புள்ளி வளர்ச்சி பெறல்
.
ஈ. மாறாத நீண்டநாள் புண்.
.
ஈ. மாறாத நீண்டநாள் புண்.
உ. மலம் கழித்தல் - வழமைக்கு மாறாக தொடர்ந்து இருத்தல். சிறுநீர் தொடர்ந்து வெளியேறுதல் (வழமைக்கு மாறாக ).
ஊ. மருந்து எடுத்தும் மாற்றம் எதுவுமற்ற இருமல்.
எ. உணவு விழுங்குவதில் கஷ்டநிலை தொடர்ந்து இருத்தல் அல்லாதுவிடின் உணவு சமிபாடு இன்மை.
ஏ. உடலில் ஏற்பட்ட கட்டி அல்லது காய் நிறமாற்றம் அடைதல் அல்லது அதன் பருமனில் மாற்றம்.
ஐ. உடல் மெலிவடைதல், இரத்தச்சோகை.
ஒ. நோய் நிர்ணயம் பெறாது காய்ச்சல் தொடர்தல் முதலியன.
பசியின்மை, உடம்பு மெலிதல் முதலியன பலகாரணங்களால் உருவாகலாம். ஆனால் பசியின்மை, உடம்பு
மெலிதல் முதலியன புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். களம், இரைப்பை, இரத்தப்புற்றுநோயாளர்
மத்தியில் இந்நிலைமை சம்பவிப்பதாகலாம். இந்நிலை கானின் வைத்திய உதவியை நாடுதல் மிகவும்
அவசியமாகும்.
மெலிதல் முதலியன புற்றுநோயின் முக்கிய அறிகுறிகளாகும். களம், இரைப்பை, இரத்தப்புற்றுநோயாளர்
மத்தியில் இந்நிலைமை சம்பவிப்பதாகலாம். இந்நிலை கானின் வைத்திய உதவியை நாடுதல் மிகவும்
அவசியமாகும்.
களத்தில் புற்றுநோய் தோற்றம் பெருமாகில் உட்கொண்ட உணவு கீழே கடத்தப்படுவதற்கு தடை
ஏற்படுவதை ஒருவர் உணரமுடியும். வேறு நோய்களாலும் இக்கஷ்டம் ஏற்படினும், நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்களில் இவ்வறிகுறி தென்படின் நிச்சயமாக புற்றுநோய் என்பதை நாம்
அனுமானித்துக்கொள்ளலாம். இந்நிலைமை ஏற்படின் வைத்திய உதவியை உடன் நாடவும்.
இரைப்பையில் புற்றுநோய் தோற்றம் பெறுமாகில்,
- உணவு சமிபாடு இன்மை தோற்றம் பெறலாம்.
- வழமையாக உண்ணும் உணவின் அளவு குறையலாம்.
- சாப்பாட்டில் பிரியமின்மை - வெறுப்பு முதலியன.
- மலம் கழித்தல் மாற்றம் - மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மலச்சிக்கல். இதனை அடுத்து
வயிற்றோட்டம். மீண்டும் மலச்சிக்கல்; மலத்துடன் இரத்தம், சீதம் கலந்து வெளியேறின், பெருங்குடல்
தொடர்பான புற்றுநோயாகலாம்.
குருதியிழப்பு, சீதம் கழித்தல்.
- மலவாசலில் குருதி, குருதியிழத்தல்- பெருங்குடலில் புற்றுநோயாகலாம்.
- சிறுநீருடன் இரத்தம் வெளியேறின் - சிறுநீரகத்தில் புற்றுநோயாகலாம்.
- இரத்த வாந்தியெடுத்தல் - இரைப்பையில் புற்றுநோயாகலாம்.
- ஒழுங்கின்றி அல்லது அதிகமாக இரத்தம் வெளியேறின் - கர்ப்பப்பை புற்றுநோயாகலாம்.
ஏற்படுவதை ஒருவர் உணரமுடியும். வேறு நோய்களாலும் இக்கஷ்டம் ஏற்படினும், நாற்பது வயதிற்கு
மேற்பட்டவர்களில் இவ்வறிகுறி தென்படின் நிச்சயமாக புற்றுநோய் என்பதை நாம்
அனுமானித்துக்கொள்ளலாம். இந்நிலைமை ஏற்படின் வைத்திய உதவியை உடன் நாடவும்.
இரைப்பையில் புற்றுநோய் தோற்றம் பெறுமாகில்,
- உணவு சமிபாடு இன்மை தோற்றம் பெறலாம்.
- வழமையாக உண்ணும் உணவின் அளவு குறையலாம்.
- சாப்பாட்டில் பிரியமின்மை - வெறுப்பு முதலியன.
- மலம் கழித்தல் மாற்றம் - மிகவும் குறுகிய காலத்தில் ஏற்பட்ட மலச்சிக்கல். இதனை அடுத்து
வயிற்றோட்டம். மீண்டும் மலச்சிக்கல்; மலத்துடன் இரத்தம், சீதம் கலந்து வெளியேறின், பெருங்குடல்
தொடர்பான புற்றுநோயாகலாம்.
குருதியிழப்பு, சீதம் கழித்தல்.
- மலவாசலில் குருதி, குருதியிழத்தல்- பெருங்குடலில் புற்றுநோயாகலாம்.
- சிறுநீருடன் இரத்தம் வெளியேறின் - சிறுநீரகத்தில் புற்றுநோயாகலாம்.
- இரத்த வாந்தியெடுத்தல் - இரைப்பையில் புற்றுநோயாகலாம்.
- ஒழுங்கின்றி அல்லது அதிகமாக இரத்தம் வெளியேறின் - கர்ப்பப்பை புற்றுநோயாகலாம்.
குறிப்பு:-
இத்தகைய குருதியிழப்புக்கு வேறுகாரணங்களும் உண்டு. எனவே வைத்திய ஆலோசனை அவசியம்
தேவையாகும்.
மார்பில் கட்டி, உடலின் எப்பாகத்திலும் கட்டி அல்லது கழலை.
இவை சடுதியில் தோற்றம் பெருமாயின், சந்தேகத்திற்குரியதாக அமைய முடியும். குறைந்த விகிதத்தில்
வளர்ந்த கட்டி சடுதியாக வளருமாகில் இந்நிலை புற்றுநோயை சுட்டிக்காட்டுதல் ஆகலாம்.
சிலவேளைகளில் மிகவும் ஆறுதலாக வளரும் கட்டிகளும் புற்றுநோயாக அமைவதுண்டு. வைத்திய
ஆலோசனை பெறுதல் அவசியமே.
உடலில் ஏற்பட்ட புண் மூன்று கிழமைகளாகியும் மாறாது இருப்பின்- வைத்திய ஆலோசனை அவசியமே.
மூன்று கிழமைகளுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல் அல்லது குரல் அடைப்பு மாறாது இருப்பின்,
இந்நிலைமை குரல்வளைப்பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயை குறிப்பதாக அமையும்.
உடலில் ஏற்பட்ட கட்டி அல்லது மச்சத்தில் சடுதியான வளர்ச்சி சம்பவிக்கில் அல்லது இரத்தம் வடியுமாகில்
புற்றுநோயாகலாம். இக்கட்டி நிறமாற்றம் ஏற்படல் அல்லது அதற்கு அருகில் புதிதாகக் கட்டி தோற்றம்
பெறல் முதலியனவும் இந்நிலையை சுட்டி நிற்பதாகக் கருதலாம்.
இவ்வறிகுறிகளை இனம் காணின் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனை நாடுதல் அவசியமாகும்.
இத்தகைய குருதியிழப்புக்கு வேறுகாரணங்களும் உண்டு. எனவே வைத்திய ஆலோசனை அவசியம்
தேவையாகும்.
மார்பில் கட்டி, உடலின் எப்பாகத்திலும் கட்டி அல்லது கழலை.
இவை சடுதியில் தோற்றம் பெருமாயின், சந்தேகத்திற்குரியதாக அமைய முடியும். குறைந்த விகிதத்தில்
வளர்ந்த கட்டி சடுதியாக வளருமாகில் இந்நிலை புற்றுநோயை சுட்டிக்காட்டுதல் ஆகலாம்.
சிலவேளைகளில் மிகவும் ஆறுதலாக வளரும் கட்டிகளும் புற்றுநோயாக அமைவதுண்டு. வைத்திய
ஆலோசனை பெறுதல் அவசியமே.
உடலில் ஏற்பட்ட புண் மூன்று கிழமைகளாகியும் மாறாது இருப்பின்- வைத்திய ஆலோசனை அவசியமே.
மூன்று கிழமைகளுக்கு மேலாக தொடர்ச்சியான இருமல் அல்லது குரல் அடைப்பு மாறாது இருப்பின்,
இந்நிலைமை குரல்வளைப்பகுதியில் ஏற்பட்ட புற்றுநோயை குறிப்பதாக அமையும்.
உடலில் ஏற்பட்ட கட்டி அல்லது மச்சத்தில் சடுதியான வளர்ச்சி சம்பவிக்கில் அல்லது இரத்தம் வடியுமாகில்
புற்றுநோயாகலாம். இக்கட்டி நிறமாற்றம் ஏற்படல் அல்லது அதற்கு அருகில் புதிதாகக் கட்டி தோற்றம்
பெறல் முதலியனவும் இந்நிலையை சுட்டி நிற்பதாகக் கருதலாம்.
இவ்வறிகுறிகளை இனம் காணின் காலம் தாழ்த்தாது வைத்திய ஆலோசனை நாடுதல் அவசியமாகும்.
No comments:
Post a Comment